Thursday, 9 August 2012

தமிழகஆட்சியின் நிலை


சமீபத்தில் ஒரு விளம்பரம் பார்க்க நேர்ந்ததது. அதில் ஒரு  சீனத்து உணவகத்தில் நமது இந்திய பிரஜை உணவருந்த செல்வார். அதில் பாஷை புரியாமல் எதை சாப்பிடுவது என்பதை சொல்ல தெரியாமல் ஏதோ ஒரு உணவை ஆர்டர் செய்வார். அவர் ஆர்டர் செய்த உணவு ஓர் அருமையான அசைவ உணவு. திருப்தியாக சாப்பிடுவார்.அதை அவர் சாப்பிட்டு முடித்து அது என்ன உணவு என்று அந்த சர்வரிடம் சைகை மூலம் பக் பக் பக் என்று கேட்பார். அவர் கேட்டதற்கு என்ன அர்த்தம் என்றால் அது வாத்தா என்பதாகும். ஆனால் அந்த சர்வர் சொன்ன பதில் அவருக்கு இடியே தலையில் விழுந்தது போல் இருந்தது. அதாவது சர்வர் சொன்ன பதில் லொள் லொள். என்னன்னா அவர் சாப்பிட்டது நாய் என்பதாகும்.
அது போல் தான் உள்ளது நமது ஆட்சியின் நிலை. நாம் பசியை போல் ஆட்சி அமைத்தால் அந்த ஆட்சி நமக்கு வாத்துகறியை போல் உணவளிக்காமல். நாய் கறியை போல் உணவளிக்கிறது. நமது தேர்த்தெடுத்த லட்சனம் அப்படி. என்னசெய்வது. விட்டால்
துக்ளக் தலைநகரை மாற்றியதை போல் இன்னும் சிறிது நாட்களில் நமது தலைநகர் கொடநாட்டுக்கு மாறினாலும் ஆச்சர்ய படுவதற்கில்லை.
ஜாக்கிரதை.



Related Article:

0 கருத்துரைகள்:



பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog