Wednesday, 26 September 2012

தென் தமிழின் 10 கட்டளைகள்!

நண்பர்களே கூகிள்சிறியில் இணைக்கப்பட்ட 3400 ஆவது பதிவு இது!
பெரியாழ்வாரின் பல்லாண்டு, பல்லாண்டு பாசுரங்களைக் கேட்டவுடன் எனக்கேனோ Decalogue அல்லது Ten Commandments நினைவிற்கு வந்தது. பெரியாழ்வார் தமிழ் இறைமையின் 10 கட்டளைகளை முன்வைக்கிறார். அவரது பல்லாண்டு, பல்லாண்டு எனும் 10 பாசுரங்களை ஏன் முதலில் சொல்ல வேண்டும் என்று வைத்தனர் என யோசித்தால் நான் சொல்ல வருவது புரியும். அதில் மிகத்தெளிவாக பாகவத இலட்சணம் சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது இறைமையை நோக்கிய நமது அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பட்டயம் போட்டு எழுதி வைத்துவிட்டார் பட்டர்பிரான். 10 பாசுரங்களிலும் தெளிவாய் சில கட்டளைகள் / அணுகுமுறை சொல்லப்படுகிறது.



Disclaimer: ஒரு பேச்சுக்கு பத்துக்கட்டளை என்பதால் வரிக்கு வரி யூத, கிறிஸ்தவ பத்துக்கட்டளைகளுடன் ஒப்பு நோக்க வேண்டாம் ;-)


இறைவன் ஒருவன், அவனைப் பல்வேறு பெயர் சொல்லி, பல்வேறு வகைகளில் வழிபடுகிறோம் என்பதைத் தமிழ் அருளாளர்கள் மிகத்தெளிவாகச் செப்பியுள்ளனர்.

வணங்கும் துறைகள் பலபல ஆக்கி, மதிவிகற்பால்
பிணங்கும் சமயம் பலபல ஆக்கி, அவையவைதோ
றணங்கும் பலபல ஆக் கிநின் மூர்த்தி பரப்பிவைத்தாய்
இணங்குநின் னோரையில் லாய்,நின்கண் வேட்கை எழுவிப்பனே.

எனவே இங்கு நான் சொல்லப்போவதை நம் தமிழ் மரபின் குரல் என்று காணுமாறு வேண்டுகிறேன். உங்கள் பின்னூட்டங்கள் நம் மரபுப்புரிதலை வளர்த்தெடுக்கும். நன்றி.



தென் தமிழின் பத்துக்கட்டளைகள்

கட்டளை 1.

இறைவன் தாயும் தந்தையுமற்ற தனிப்பொருள். வேரும், வித்துமற்ற தொன்மரம். இறைவன் நம்மைக் காக்கின்றான் என்பது 
பொதுப்புரிதல் என்றாலும் தாயும், தந்தையுமற்ற இறைவனைக் காக்க நாம் ‘காப்பு, காப்பு’ என்று தூய்மையுடன் எண்ணுதல் 
வேண்டும். 


பல்லாண்டு பல்லாண்டு பல்லாயி ரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்
செவ்வடி செவ்விதிருக் காப்பு





இறைவனை நாம் காப்பதாவது? அவனுக்கு நாம் ‘காப்பு, காப்பு’ என்று சொல்வதாவது எனும் கேலிக்குரல் உள்ளே எழுவது
நியாயமானதே! இறைவழிபாடு என்பது அடிப்படையில் பா(b)வசுத்தி அளிப்பது. கல்ப கோடி காலங்களாக அவன் தன்னுள்ளே படைத்து, காத்து கெடுத்து உழன்று கொண்டு இருக்கிறான். நாம் கையில் ஒன்றுமில்லாமல் பிறக்கிறோம். எல்லாமுமாக அவன் உடன் இருந்து, ‘கல்லினுள் தேரைக்கும், கருப்பை’ உயிர்க்கும் உள்ளுயிராய், உறை பொருளாய் இருந்து வெளியே காற்று, நீர், மண்ணிலிருந்து உணவு இவைகளை நமக்களித்து இரட்சிக்கின்றான். அத்தகைய வள்ளலுக்கு நாம் செய்யக்கூடிய கைமாறு, ‘நீ! நல்லா இருப்பா!’ என்று வாழ்த்துவதே! இப்படி வாழ்த்துவது ஒரு வகையில் நம்மை நாமே வாழ்த்துவதாகும். ஏனெனில்,

யானும் நீயே என்னுள் உறைதலின்
எனதும் நீயேயுனதன்றியின்மையின்... (ஸ்வாமி வேதாந்த தேசிகன்)

என்று சொல்கின்றார்போல

நானுன்னை யன்றி யிலேன்கண்டாய், நாரணனே
நீயென்னை யன்றி யிலை. (திருமழிசை ஆழ்வார்)

எனும்படிக்கு அவனை வாழ்த்துவது நம்மை நாமே வாழ்த்திக்கொள்வதாகவும் அமையும்.

மேலும், ‘தாயினுற்சிறந்த தயாபரனாக’ அவன் இருந்தாலும், அவனுக்குத் தாயாக நம்மை ஆக்கிக்கொண்டு அவனை வாழ்த்துவது ஒரு மிகச்சிறந்த தமிழ் மரபு என்பதை எண்ணுங்கால் உள்ளம் குளிர்கிறது.



Related Article:

0 கருத்துரைகள்:



பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog