தினமும் ஒரு மந்திரம்
திருமந்திரத்தில் முதல் பாடலாக விநாயகர் வணக்கமாக அமைந்த பாடல் நால்வர்கள் பாடிய தேவார திருமுறைகளில் விநாயகர் துதி இல்லை என்பதை உணரவும், சங்க நூற்களில் மற்றும் திருவாசகத்திலும் விநாயகப் பெருமானை பற்றிய தொடர்களோ பாடல்களோ இல்லாமையை உணரலாம்
ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறைபோலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே,
விளக்கம்,- ஐந்து கைகளையும் யானை முகத்தையும் இளம் பிறைச்சந்திரனைப் போன்ற வளைந்த தந்தத்தையும் உடைய சிவபெருமானின் திருமகனும், அறிவுக கொழுநதாக உள்ளவனுமான விநாயகனை உள்ளத்தில் வைத்து, அவன் திருவடிகளையும் பேர்ற்றி கின்றேன்
Related Article: