ஒரு பெண்ணின் வாழ்வில் மிகப் பெரிய விஷயம், குழந்தை பெறுவது. திருமணத்தை விடவும் சவாலான, அதே நேரம் திருப்தி அளிக்கும் விஷயம். திருமணமான பெண் கர்ப்பம் தரிப்பது முதல் குழந்தை பெறும் வரை, அதை ஆழ்ந்து அனுபவிக்க வேண்டும். அதற்கான ஆறு படிகள் இதோ:
* முதலில், கர்ப்பம் தரிக்க விரும்பும் பெண் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். மகப்பேறு மருத்துவரைப் பார்த்து, கர்ப்பம் தரிப்பதற்கு ஏற்ற வகையில், தன் உடல்நிலை உள்ளதா என்று அறிந்துகொள்ள வேண்டும். நோய்த் தொற்று ஏதும் இருக்கிறதா, எடை, ரத்த அழுத்தம் சரியான அளவில் உள்ளதா என்பதை தெரிந்து கொள்வது அவசியம்.
* மகப்பேறுக்கு தயாராகும் பெண், நாக்குக்கு அடிமையாகாமல், ஆரோக்கியம் காக்கும், சத்துகள் நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவதில் கவனம் செலுத்த வேண்டும். பிரசவத்துக்கு முன்பும், பின்பும் பழங்கள், பச்சைகாய் கறிகள், முழுத்தானியம், புரதச் சத்து மிக்க உணவு வகைகளை ஆகியவற்றைச் சாப்பிடுவது அவசியம். கால்சியம், இரும்பு சத்து, வைட்டமின்கள் அத்தியாவசியம்.
* பேஷனுக்காக கூட புகை பிடித்தல், மது அருந்துதல் போன்ற தீய பழக்கங்கள் கூடவே கூடாது. உடற்பயிற்சி செய்வது அவசியம். அது உங்களின் எடையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதுடன், கர்ப்பம் தரிப்பதால் ஏற்படும் மாற்றங்களில் இருந்து உடலைக் காக்கும். சுறுசுறுப்பான ஒரு நடை அல்லது சிறு பயிற்சி, உங்களின் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.
* ஒரு சராசரி பெண் தன் வாழ்நாளில், 400 கருமுட்டைகளை உற்பத்தி செய்கிறார். ஒரு பெண், மகப்பேறுக்கு மிகவும் வாய்ப்பான நாட்களை அறிந்து கொள்வது அவசியம். பிசுபிசுப்பான திரவ சுரப்பைக் கொண்டும் அதை அறியலாம். பெண்களின் உடல், கருமுட்டையை வெளியிடும் முன் உயிரணுவை வரவேற்கும் விதமாக, அதற்கேற்ற சூழலை உருவாக்குகிறது. அவற்றில் ஒன்று தான், உயிரணு பயணத்துக்கு ஏற்ற வகையிலான திரவ சுரப்பு. அது ஒட்டக்கூடிய தாகவோ, பசை போலவோ, கிரீம் போலவோ இருக்கலாம்.
* படுக்கையறை உறவு என்பது எந்த ஒரு நிர்ப்பந்தங்கள் இல்லாததாகவும், இன்ப விளையாட்டாக வும் இருக்க வேண்டும். உறவுக் குப்பின், உடனே எழுந்து விட வேண்டாம். சிறிதுநேரம், அப்படியே மல்லாந்து கிடப்பது கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கிறது என்று, பாலியல் நிபுணர்கள் கூறுகின்றனர். குறைந்த பட்சம் ஐந்து நிமிடங்கள் அப்படி படுத்திருந்தால் போதும். உயிரணு, கரு முட்டையைத்தேடி அடைய அது உதவும்.
* கர்ப்பம் தரிக்கும் பெண் உடல்ரீதியாக மட்டுமின்றி, உணர்வுரீதியாகவும் அதற்கு தயாராக வேண்டும். தன் முழுக் கவனத்தையும் மகப்பேறில் செலுத்தியாக வேண்டும். ஒரு குழந்தையைப் பெற்று வளர்ப்பது கடினமும், பொறுப்பும் நிறைந்த வேலை என்பதை உணர வேண்டும். குழந்தையை பெற்று வளர்ப்பதில், கணவரை விட மனைவிக்கே பொறுப்புகள் அதிகம்.
உடல்ரீதியாகவும், உளரீதியாகவும் அவர், சவால்களை எதிர்கொள்ள நேரும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
நன்றி:தினமலர்
Related Article: