Friday 31 May 2013

கரண் நடிக்கும் கன்னியும் காளையும் செமகாதல்!

கரண் நடிக்கும் புதிய படத்திற்கு கன்னியும் காளையும் செமகாதல் என பெயரிடப்பட்டுள்ளது.
இந்தப் படத்தை சிங்கம் சினிமா பட நிறுவனம் சார்பில் வி.சி. வடிவுடையான் தயாரித்து இயக்குகிறார். ஏற்கெனவே இவர் கரண் நடிப்பில் தம்பி வெட்டோத்தி சுந்தரம் படத்தை இயக்கி இருக்கிறார். ஜான்பீட்டர் இசையமைக்கிறார். நாயகியாக திருப்தா அறிமுகமாகிறார். விவேக், இயக்குனர் தருண் கோபி, அப்புக்குட்டி, கஞ்சா கருப்பு, கனல் கண்ணன், காதல் தண்டபாணி உள்பட பலர் நடிக்கின்றனர்.
படம் குறித்து இயக்குனர் வி.சி. வடிவுடையான் கூறியதாவது: பரம்பரையில் மாட்டிய ஒரு பெண்ணின் கதையே இப்படம். மண், பெண், பணம் மூன்றும் பிரச்சினைக்குரிய விஷயம். அதில் பெண் என்ற விஷயத்தை தொட்டுள்ளேன். பரம்பரை என்ற குறுக்கு சந்தில் மாட்டிசிக்குண்டு போகிற மனிதர்களின் வாழ்க்கை இது. பரம்பரையின் பழைய சுவடுகள் பயம் நிறைந்தவை.
அப்படி பழைய பரம்பரையில் சுவடுகளில் சிக்குண்டு போன மூன்று கதாபாத்திரங்கள் தான் கதையை தூக்கி பிடிக்கின்றன. படத்தில் உள்ள கேரக்டர்களை புதிய பொலிவில் காட்ட முயற்சி செய்துள்ளேன் என்றும் இயக்குனர் கூறினார்.
நன்றி:தினமணி


Related Article:


பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog