Tuesday 11 June 2013

குந்தி சொன்ன பத்ரா கதை - ஆதிபர்வம் பகுதி 121

(சம்பவ பர்வ தொடர்ச்சி)

வைசம்பாயணர் சொன்னார், "இப்படிச்சொல்லப்பட்ட குந்தி தனது நாயகனான மன்னன் பாண்டுவிடம், அந்த குருக்களில் எருதைப் போன்றவனிடம், "ஓ அறம்சார்ந்தவரே, நீர் என்னிடம் இப்படிச் சொல்லுதல் தகாது. ஓ தாமரைக் கண் கொண்டவரே, நான் உமக்கே என்னை அர்ப்பணித்திருக்கிறேன். ஓ பெரும் கரம் கொண்ட பரதரே, பெரும் சக்தி கொண்ட நீரே என்னிடம் பிள்ளை பெற முடியும். அதன் பிறகு நான் சொர்க்கத்திற்கு உம்முடனே சேர்ந்தே வருகிறேன். ஓ குருகுல இளவரசரே, உம் அணைப்பில் என்னை ஏற்று பிள்ளைகளைப் பெறுவீராக. உமது அணைப்பைத் தவிர வேறு எந்த மனிதனின் அணைப்பையும் நான் கற்பனையில் கூட கருதமாட்டேன். உம்மைவிட உயர்ந்தவனாக எந்த மனிதன் உலகத்தில் இருக்கிறான்? ஓ அறம்சார்ந்தவரே, தாமரைக் கண் கொண்டவரே, நான் கேள்விப்பட்ட ஒரு புராண விவரிப்பை கேளும். நான் அதைச் சொல்கிறேன்.


Related Article:


பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog