இந்திஷ் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் படத்துக்கு தேடி பிடி அடி 3டி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதில் புதுமுகங்கள் மகி, கவின், அர்ஜுன், யாஷிகா, சங்கவி ஆகியோர் கதாநாயகன்–கதாநாயகிகளாக நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் ஏகன். படத்தை பற்றி டைரக்டர் ஏகன் கூறுகையில், கோவையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மைய கருவாக கொண்ட படம், இது. மகி, கெவின், அர்ஜுன், யாஷிகா, சங்கவி ஆகிய 5 பேரும் டேட்டிங்குக்காக அடர்ந்த காட்டு பகுதிக்கு செல்கிறார்கள். அங்கு அவர்கள் சந்திக்கும் திகில் சம்பவங்கள் தான் கதை. சரண் பிரகாஷ், கார்த்திக் ஹர்ஷா இருவரும் இசையமைக்க, பொன் சங்கர் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். படப்பிடிப்பு சத்யமங்கலம், பொள்ளாச்சி, மற்றும் கேரள எல்லையில் நடைபெற்று முடிவடைந்துள்ளது.
நன்றி:தினமலர்
Related Article: