சாதாரணமாக ஒரு படத்திற்கான கதையை உருவாக்கும்போதே அதற்கான தலைப்பு தானாக வந்து நிற்கும். ஆனால், பில்லாவைத் தொடர்ந்து விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டபோதும், இன்னும் அதற்கான தலைப்பை வைக்கவில்லை, ஆனால், படத்தின் கதை இணையதளம் சம்பந்தப்பட்டது என்பதை அறிந்த ரசிகர்கள் அப்படத்துக்கு வலை என்று எப்போதோ பெயர் வைத்து விட்டனர்.
இதையடுத்து விஷ்ணுவர்தனிடம் தலைப்பு குறித்து கேட்கப்பட்டபோது, அஜீத் படத்துக்கு வலை என்று பெயர் வைக்கவில்லை என்றார். சரி என்னதான் தலைப்பு வைப்பதாக உத்தேசம்? என்று கேட்டபோது, நானும் அதைத்தான் யோசித்துக் கொண்டிருக்கிறேன். மே 1-ந்தேதி வரும் அஜீத்தின் பிறந்த நாளின்போது அப்படத்துக்கான தலைப்பை கண்டிப்பாக அறிவிப்பேன் என்றார். ஆனால், அஜீத் பிறந்த நாள் எப்போதோ முடிந்து விட்டது. ஆனால் இன்னமும் தலைப்பு பற்றி எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை அவர். அஜீத்தின் 53வது படம் என்ற பெயரில் அப்படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டார். இதனால் அஜீத்தின் ரசிகர்கள் கொதித்துப்போயிருக்கிறார்கள்.
சரி, விஷ்ணுவர்தன்தான் இப்படி என்றால், அடுத்து அஜீத்தின் 54வது படத்தை இயக்கும் சிறுத்தை சிவாவும் படத்திற்கான டைட்டீலை அறிவிக்கவில்லை. இதனால் குழம்பிப்போயிருக்கும் ரசிகர்கள், இவர்கள் படம் ரிலீசாகும்போதாவது பெயர் வைப்பார்களா? இல்லை அஜீத்தின் 53வது படம், 54வது படம் என்றே வெளியிடுவார்களா? என்று ஒருவரைப்பார்த்து ஒருவர் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
நன்றி:தினமலர்
Related Article: