நடிகை அஞ்சலி கடந்த ஏப்ரல் 8-ம்தேதி திடீரென்று மாயமானார்.
சித்தி பாரதிதேவி, டைரக்டர் களஞ்சியம் ஆகியோர் தன்னை கொடுமைபடுத்துவதாகவும் எனவே வீட்டை விட்டு வெளியேறி விட்டதாகவும் அப்போது புகார் கூறினார். ஆனால் சித்தி பாரதிதேவி இக்குற்றச்சாட்டை மறுத்தார். அஞ்சலியை யாரோ கடத்தி வைத்து தனக்கு எதிராக பேசவைப்பதாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுத்தார். அஞ்சலியை தேடி கண்டுபிடிக்கும்படியும் அதில் குறிப்பிட்டு இருந்தார்.
இதுபோல் அஞ்சலியின் அண்ணனும் ஐதராபாத் போலீஸில் அஞ்சலியை காணவில்லை என்று புகார் செய்தார். சென்னை மற்றும் ஆந்திர போலீஸார் அவரை தேடினர். இதையடுத்து ஐதராபாத் போலீசில் திடீரென ஆஜராகி தன்னை யாரும் கடத்த வில்லை என்று வாக்குமூலம் அளித்தார். மன உளைச்சலால் மும்பையில் சில நாட்கள் ஓய்வு எடுக்க சென்று இருந்ததாக கூறினார். தற்போது மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கிவிட்டார்.
இந்நிலையில் நடிகை அஞ்சலி அவருடைய சித்தி பாரதி தேவியுடன் சமரசமாகிவிட்டதாக ஆந்திராவிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் தெலுங்கில் பலுப்பு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்திருக்கிறது. இவ்விழாவில் அஞ்சலி தனது சித்தி பாரதி தேவியுடன் வந்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். இருவருக்குமிடையே சமாதானம் ஏற்பட்டு விட்டதாகவும், அஞ்சலிக்கு சேர வேண்டிய சொத்துக்களை அவருடைய சித்தி கொடுத்து விட்டதாகவும் ஆந்திரா திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
நன்றி:தினமணி
Related Article: