நடிகை சிம்ரன் கடத்தப்பட்டதாக சென்னையில் பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன.
இதைக்கண்ட பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. சிம்ரனை யார் கடத்தியது. போஸ்டர் உண்மையா? போலியா? என்கிற ஒருவித சலசலப்பு காணப்பட்டது. பொதுமக்கள் கூடும் இடங்கள், பஸ் நிலையங்கள், ரோட்டோர சுவர்களில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. எனவே, இச்செய்தி ஒருவேளை உண்மையாக இருக்குமோ என நம்பிய பலர் பத்திரிகை அலுவலகங்களுக்கு போன் செய்து விசாரித்தனர். இந்த போஸ்டர் டி.வி. நிகழ்ச்சிக்கான விளம்பரம் என்று தெளிவான பிறகே அவர்கள் நிம்மதி பெருமூச்சிவிட்டனர்.
பிரபல டி.வி. சேனல் ஒன்றில் ‘கேம்ஷோ' ஒன்றை சிம்ரன் தொகுத்து வழங்கவிருக்கிறார். ஒரு வருடம் இந்த நிகழ்ச்சியை அவர் நடத்துகிறார். அதற்காகவே இப்போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். ஒருசமயத்தில் சிம்ரனை திரையில் கண்டாலே பெருமூச்சிவிட்டவர்கள் இப்போது அவரது போஸ்டரை பார்த்து நிம்மதி பெருமூச்சிவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி:தினமணி
Related Article: