Saturday 22 June 2013

தரமானதுதானா... கல்வி?

                                                                                                                                     என்.பகத்சிங்

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள், கல்லூரிகள் துவங்கியுள்ளன.
தாத்தா - பாட்டி முதல் அத்தை - மாமா வரை எல்லோரும் பிள்ளைகள் பெறும் மதிப்பெண் கள் மீதே கவனமாக இருந்து, எதிர்பார்ப்பு களில் வெற்றிகண்டவர்களாகவும், ஏமாந்த வர்களாகவும் இருப்பர்.

 மதிப்பெண்கள் பெறு வதும் மட்டுமே கல்வியின் இறுதி வெற்றியாக கருதும் மனோபாவம் இவர்களுக்கு எங் கிருந்து வந்தது? என்ற கேள்வி நெடு நாளாகவே இருந்து வருகிறது.
 ஒரு மாண வரின் அறிவுத்திறனை எங்கிருந்தோ, யாரோ ஒருவரால் வழங்கப்படும் மதிப்பெண்கள் சரியாகத் தீர்மானிக்குமா? அந்த அளவுகோல் சரியானது தானா?
மதிப்பெண்கள் மட்டுமா : மதிப்பெண் பெற்றுத்தரும் சமூக அங்கீ காரம் மிக முக்கியமாக மாற்றப்பட்டதின் விளைவுதான் மதிப்பெண்ணை மட்டுமே முன்னிறுத்தும் இன்றைய மனோநிலை. மத்திய தர, உயர் மத்திய தர வகுப்பினரின் வீடு களில் மதிப்பெண் அதிகமாகவும், குறைவாக வும் பெற்ற மாணவர்களைவிட அவர்தம் குடும் பத்தினர் தேர்வை யுத்தகளமாகவும், மதிப் பெண்ணை வெற்றிச் சின்னமாகவும் கருது கின்ற மனப்பாங்கு கொண்டவர்களாகவே மாறியுள்ளனர்.
 பள்ளியிறுதி தேர்வில் பிள்ளைகள் 1,150க்கு மேல் மதிப்பெண் பெற்றால்தான் பெற் றோர்கள் நிம்மதியாக மூச்சுவிடுகின்றனர். மதிப்பெண்ணுக்குப் பின்னால் ஒரு மாயை யை ஏற்படுத்தி அதைக் கொண்டு ஒருவரின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் நடப்புச் சூழலில் ஒரு மாணவருக்கு பின்னால் இந்த வகுப்பினரின் முழு குடும்பமும் உழைக்கிறது.
அதிக மதிப்பெண் பெறுவதே தரமான கல்வி என்ற முடிவுக்கு வருபவர்களின் இந்த மனோ பாவத்திற்கான ஊற்றுக்கண் இந்தியாவின் கல்விக் கொள்கை, வேலைவாய்ப்புக் கொள் கை, தொழிற்கொள்கை, பொருளாதாரக் கொள் கை ஆகியவற்றாலேயே நிகழ்ந்துள்ளது. தர மான கல்வி பற்றிய சிந்தனையோட்டத்தை ஊடகங்களும் திறமையாக, கல்வி குறித்த பேட்டிகள், கல்வியாளர்களின் விளக்கம், கல்விமலர், கல்வி கண்காட்சியென உரு வாக்கி நடத்துகின்றன.

தனியார் பள்ளிகள் :---------------------------------------------------------------------------------------------------------------------------------   
முகனூலில்  முத்திரை பதிந்தவை.
----------------------------------------------------
 நன்றி :எதிரொலி

கனவுக்கன்னியும் காகிதப்புலிகளும்!


தமிழக முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா தமிழ்நாட்டின் பல்வேறு வளர்ச்சித்திட்டங்களுக்கு ஜப்பானிய சர்வதேச கூட்டுறவுக்கான அமைப்பின் நிதி உதவியை நாடியிருக்கிறார்.


இதுகுறித்து அந்த குறிப்பிட்ட ஜப்பானிய அமைப்பின் அதிகாரிகள் தன்னை நேரில் சந்தித்தபோது ஜெயலலிதா தனது கோரிக்கைகளை வலியுறுத்தியதாக தமிழக அரசின் செய்திக்குறிப்பு கூறுகிறது. மேலும் அந்த செய்திக்குறிப்பில் "2023 ஆம் ஆண்டில் தமிழ்நாடு" என்கிற ஜெயலலிதாவின் "கனவு திட்டத்தின்" இரண்டாம் பாகம் விரைவில் வெளியாக இருப்பதாகவும் அந்த இரண்டாம் பாகத்தில் ஜெயலலிதா பட்டியலிடப்போகும் திட்டங்களுக்கு ஜப்பானிய நிதி உதவி தேவை என்று ஜெயலலிதா கோரியதாகவும் தமிழக அரசின் செய்திக் குறிப்பு கூறுகிறது.



Related Article:


பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog