இத்தாக்குதல் சம்பவத்தின் போது, அருகிலுள்ள வீடுகள் வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டன.
இந்தச் சம்பவத்தில் மசூதிக்குப் பாதுகாப்பு வழங்கிய இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட 8 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, அப்பிரதேசத்தில் அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், மேலும் நேற்றிரவு தொடக்கம் இன்று காலை 7 மணிவரையும் கிரான்ட்பாஸ் பகுதியில் ஊரடங்குச்சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது.
கொழும்பு மேயர் ஏ.ஜே.எம். முஸம்மில், அமைச்சர் மேர்வின் சில்வா, பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா ஆகியோர் தாக்குதல் நடத்தப்பட்ட பகுதிக்கு விஜயம் செய்திருந்தனர்.
Related Article:
0 கருத்துரைகள்:
Post a Comment