Friday 9 August 2013

சமர் வந்தது- எஸ்.ஜே.சூர்யா அதிர்ச்சியானார்?

Samar_Isai.
மது அருந்துவது பற்றி ஒரு பொதுவான அபிப்ராயத்தை சொன்னார் த்ரிஷா.
அதற்குள் பொங்கியெழுந்த சமூக காவலர்கள், த்ரிஷா வீட்டுக்கு சரக்கு பாட்டில்களை அனுப்புவோம் என்று கொக்கரித்தார்கள். தேவையில்லாமல் தன்னை பிரஸ்மீட்டுக்கு அழைத்து வம்பில் மாட்டிவிட்ட விஷால் மீது தீராத கோபத்திலிருக்கிறார் த்ரிஷாவும். இனிமேல் அவர் படத்தில் நடிக்கவே மாட்டேன் என்று கூறுகிற அளவுக்கு விஷால் மீது ஆத்திரம் நீடிக்கிறது அங்கே.
இதற்கிடையில் விஷாலின் சமர் மீதும் அதே போல ஒரு ஆத்திரத்தை காட்டுகிறது இன்னொரு தரப்பு. அது எஸ்.ஜே.சூர்யாவின் இசை படக்குழு. இப்படத்தின் படப்பிடிப்பு ஏறத்தாழ முடிந்துவிட்டது. இன்னும் கொஞ்சம் மட்டுமே மீதி. அந்த படத்தின் கதையும் காட்சியமைப்புகளும் சமர் படத்தை போலவே அமைந்திருக்கிறதாம். இதில் பேரதிர்ச்சி அடைந்திருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.
இந்த படம் இரண்டு இசைமைப்பாளர்கள் பற்றிய கதையாக இருந்தாலும், ஒரு இசையமைப்பாளரை இன்னொரு இசையமைப்பாளர் மண்டை காய விடுவதுதான் படம். அதாவது சமர் படத்தில் விஷாலை சுற்றலில் விட்டதை போலவே விடுவாராம். இதனால் மயக்கம் வராத குறையாக புலம்புவதுதான் இன்னொரு இசையமைப்பாளரின் வேலை.
சமரும் தன் இசை படத்தின் காட்சிகளை ஒட்டியே இருந்ததால்தான் திக்குமுக்காடி போயிருக்கிறார் சூர்யா. ஒரு டி.வி.டி யை இருவர் பார்த்து வியந்தால் இப்படியெல்லாம்தான் நடக்கும்.
ஓடாத ஒரு படத்தை பார்த்து இன்னொரு படம் அதிர்ச்சியாவது இயற்கைதானே?

Related Article:

0 கருத்துரைகள்:



பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog