சின்ன தலைப்புதான்....! ஆனா மேட்டர் பெரிசு...!! இதே முதல்லே ஒத்துக்கறீங்கல்லே !!!
கல்யாணம் ஆனவங்களுக்கு தெரிஞ்ச விஷயம்.. ஆகாதவங்களுக்கு புரிஞ்ச விஷயம். ஆனா அது பத்தி நிறைய கனவுகள் எல்லோருக்கும் இருக்கும்.படிக்கிறப்போவே குதிரை பின்னாடி போகுது இல்லே...? அப்படி ஒரு விஷயம் சார் இது.
முதலிரவு யாருக்கு...? ஒருவனுக்கு ஒருத்தியா.. ஒருத்திக்கு ஒருவனா இருந்தா அங்கே அது சம்பிரதாயப்படி முதலிரவு. வேறு ஏதாவது சமச்சாரம்ன்னா முதலிரவுக்கு முக்கியத்துவம் ஏதுமில்லே. அதுக்கு பேரு வேற..!
சிலருக்கு முதலிரவு சுகம். அதாவது ஏற்கனவே ஒருத்தருக்கொருத்தர் பாத்துப், பழகி, பேசி பின் திருமணமாகி (கிட்டத்தட்ட காதல் திருமணம்) அதன் பின் வரும் முதலிரவு ... புரிதல் நிறைய இருக்கும்..! நினைத்தாலே இனிக்கும் !!
வேறு சிலருக்கு கொஞ்சம் கஷ்டமா கூட இருக்கலாம்.. மனசிலே என்ன இருக்கு என்பது யாருக்கு தெரியுங்க..?
இன்னும் சிலருக்கு புரிதல் ரொம்ப அதிகம் இருக்கும். திருமணக் களைப்பிலே ரெண்டு பேரும் முதலிரவுலே படுத்து தூங்கி விடுவது கூட உண்டு. அதனாலே ஒரு பாட்டி தனது பேத்தியை திருமணம் முடிந்த கையோடு ஒரு நாலு மணி நேரேம் பகல் பொழுதிலே நல்ல படுத்து ரெஸ்ட் எடுக்க சொன்னாங்களாம் . மாப்பிள்ளை அதுக்கு முன்னடியே ரெஸ்ட் எடுக்க போனது யாருக்கும் தெரியாது என்பது இன்னொரு முக்கிய மேட்டர். கவனிக்க வேண்டியது சார்...!!
முதலிரவு முடிந்த கையோட தேனிலவு போகிற சதிபதிகள் நிறைய உண்டு. அதாவது வீட்டிலே டிச்டர்பன்ஸ் ஜாஸ்தியாம். ரெண்டு பேரா போனவங்க மூணு பேரா தயாராவதும் (தாயராவதும்) உண்டு.
சிலருக்கு முதலிரவிலே தகராறு வருவதும் உண்டு. என்ன பண்றது ..? எல்லாம் தலை விதி சார் ! எப்படியோ போகப் போக பிக்கப் செய்து மேக்கப் ஆவுருதும் உண்டு. ஆனா பேக்கப் ஆகாம இருந்தா சரி..
இன்னும் சிலர் முதலிரவை திட்டமிடுவாங்க... அதாவது குடும்பத் திட்டமிடல். கொஞ்ச நாள் ஜாலிய இருக்கலாம்..! அப்புறம் குழந்தை பெத்துக்கலாம்..!! இது ஒரு ரகம். ஆனா இப்படி ஜாலியா இருக்கலாம் என்று நினைத்து கொஞ்சம் சீரியசாக போன விசயமும் உண்டு. அவர்கள் கடைசி வரை குழந்தை பெற்றுக் கொள்ளாமல் ஒருவர் மற்றொருவருக்கு குழந்தையாக மாறிய வரலாறும் மருத்துவத்தில் உண்டு. எதுவும் காலத்தே பயிர் செய்யனும் சார்.
இன்னொரு ரகமும் உண்டு. கல்யாணம் முடிஞ்ச கையேடு பலகாரம் தர்றதிலே சம்மந்தி சண்டை வந்து முதலிரவு தள்ளிப் போகிறதும் உண்டு. அந்த சிருசுங்கலே பாக்க பாவமா இருக்குமில்லே சார்..? இது இருதலை விருப்பம்.
இதோ ஒருதலைக்கு ஒரு எடுத்துக்காட்டு. அதாவது, மாப்பிள்ளை பையன் பொண்ணை ரொம்ப விரும்பி கல்யாணம் பண்ணியிருப்பான். எப்போடா தாலி கட்டலாம்.. எப்போடா ரூமுக்கு போகலாம் என்று அடிக்கடி பொண்ணை பாத்து ஒரு தினுசா சிரிச்சுகிட்டே இருப்பான். ஆனா பொண்ணுக்கு அப்படி விருப்பம் எதுவும் இருக்காது. மனசிலே வேறு சிந்தனைகள் அல்லது பழைய பழகிய ஆள் ஒட்டிக் கொண்டு இருப்பான். ஏதோ ஒரு நிர்பந்தத்துக்கு கல்யாணம் பண்ணியிருப்பா அவ. அப்போ ரொம்ப கஷ்டம் சார். பையனோட கனவுலே மண்ணை அள்ளிப் போட்ட கதைதான். பின் குறிப்பு : இது பொண்ணு விசயத்திலும் பொருந்தும் சார்...
பாஸ்ட் நைட்டுக்கு முன்னாடி ஹிந்து மதப்படி ரெண்டு ஹோமம் செய்வது நல்லது. அதாவது, (1) கர்ப்ப சாந்தி ஹோமம். இது கர்ப்பம் நல்ல முறையில் தரிக்க வேண்டும் என்பதற்கு. (2) சந்தான ஹோமம். - இது குழந்தை பேறை தருவது. அதாவது குழந்தை நன்றாக பிறந்து, தாயும் சேயும் நலமாக இருக்க வேண்டும் என்பதற்கு. ஒரு சந்தேகம் சார். இந்த ஹோமம் எல்லாம் இப்போ செய்றாங்களா சார்.... ?
முக்கியமா ஒன்னு இங்கே கவனிக்க வேணும்..? அதாவது, 'பஸ்ட் நைட்' என்று சொன்னவுடன், நிச்சயம் 'லாஸ்ட் நைட்' என்று ஒன்றும் உண்டு என்பதை நாம் இங்கே மறக்கக் கூடாது.
பஸ்ட் நைட்டுக்கும், லாஸ்ட் நைட்டுக்கும் உள்ள ஒரு மிகப் பெரிய வித்தியாசம் என்ன தெரியுமா?
பதில் தெரிய பின்வரும் இணைப்பின் மீது சொடுக்கவும்..
Related Article:
0 கருத்துரைகள்:
Post a Comment