விஜய்யை வைத்து ப்ரியமுடன், யூத் போன்ற படங்களை இயக்கியவர் வின்சென்ட் செல்வா. இவர் இப்போது துள்ளி விளையாடு என்ற படத்தை இயக்கியுள்ளார். யுவராஜ், தீப்தி ஹீரோ, ஹீரோயின்களாக நடிக்க இவர்களுடன் பிரகாஷ்ராஜ், ஜெயபிரகாஷ், பரோட்டோ சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆர்.பி. ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து ரிலீஸ்க்கு தயாராகியுள்ளது.
இந்நிலையில் இப்படத்தினை நடிகர் விஜய்க்கு பிரத்யேகமாக போட்டு காட்டினார் செல்வா. படத்தை பார்த்து விட்டு நடிகர் விஜய், வின்சென்ட் செல்வாவை மிகவும் பாராட்டியுள்ளார். புதுமுகங்கள் நடித்திருந்தாலும், சினிமாவில் ரொம்ப அனுபவம் வாய்ந்தவர்கள் போன்று நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். நல்ல பொழுதுபோக்கு அம்சங்களுடன் பிரகாஷ்ராஜுக்கும் அந்த மூன்று பேருக்கும் இடையே நடக்கும் டக் ஆஃப் வாரை ரசிகர்கள் நிச்சயம் விரும்புவார்கள் என்று கூறியுள்ளார்.
நன்றி:தினமலர்
Related Article: