Friday 24 May 2013

நீர் மருத்துவம்


தண்ணீரைக் கொண்டு பல வியாதிகளைக் குணப்படுத்த முடியும் என்று ஜப்பானிய மருத்துவர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது.

அதாவது தலை வலி, உடல் வலி, இதய நோய்கள், ஆத்திரட்டிஸ் எனப்படும் எலும்பு சம்பந்தப்பட்ட நோய், வேகமான இதயத்துடிப்பு, எபிலெப்ஸி எனப்படும் வலிப்பு நோய், அளவுக்கதிகமான உடல் பருமன், ஆஸ்துமா, காச நோய், மூளைக்காய்ச்சல், சிறு நீரகம் மற்றும் சிறு நீர் வியாதிகள், வாந்தி, பேதி, வாய்வுக் கோளாறுகள், மூல வியாதி, சர்க்கரை வியாதி, சகலவிதமான கண் நோய்கள், கர்ப்பப்பை புற்று நோய், ஒழுங்கீனமான மாதவிடாய் கோளாறுகள், காது, மூக்குத், தொண்டை கோளாறுகள் போன்ற மிகப் பழைய கடுமையான வியாதிகள் மட்டுமல்ல நவீன கால நோய்களைக் கூட இந்த நீர் மருத்துவம் மூலம் நூறு சதவீதம் வெற்றிகாரமாக குணப்படுத்த முடியுமென ஜப்பானிய மருத்துவ சம்மேளனம் நிரூபித்துக் காட்டியிருக்கிறது.
மருத்துவ முறைகள்:
*  நீங்கள் காலையில் தூங்கி எழுந்ததும், பல் துலக்கும் முன்பே 650 மில்லி லிட்டர் தண்ணீர் அருந்துங்கள்.
*  பல் துலக்கி வாய் அலம்பிய பின் 45 நிமிஷங்களுக்கு எந்தவிதமான உணவும் உட்கொள்ளக் கூடாது.( உணவு, நீர் ஆகாரம்)

*  45 நிமிடங்களுக்குப் பின் உங்களின் வழக்கமான உணவை உட்கொள்ளலாம்.
*  காலை உணவிற்கு பின் 15 நிமிஷங்களுக்கும், மதியம் மற்றும் இரவு உணவிற்கு பின் 2 மணி நேரங்களுக்கு எந்தவிதமான ஆகாரங்களும் உட்கொள்ளக் கூடாது. (After 15 minutes of breakfast, lunch and dinner do not eat or drink anything for 2 hours)
*  ஒர் முறையில் 4 டம்ளர் தண்ணீரை அருந்த முடியாத முதியோர் அல்லது நோயாளிகள் ஆரம்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக அருந்தி நாளடைவில் 4 டம்ளர் அளவு தண்ணீர் அருந்த பழகிக் கொள்ளலாம்.
மேற்குறிப்பிட்ட முறையை பின்பற்றுவதனால் நோயாளிகள் தமக்கு ஏற்பட்டுள்ள நோய்கள் நீங்கி சுகம் பெற்று ஆரோக்கியமான வாழ்கையை வாழலாம்.
எந்த நோய்க்கு எத்தனை நாட்கள் இந்த முறையை பின்பற்ற வேண்டும்:
உயர் இரத்த அழுத்தம் - 30 நாட்களும்
வாய்வுக் கோளாறுகள் - 10 நாட்களும்
சர்க்கரை வியாதிக்கு - 30 நாட்களும்
மலச்சிக்கல் - 10 நாட்களும்
புற்றுநோய் - 180 நாட்களும்
காச நோய் - 90 நாட்களும்
ஆத்திரட்டிஸ் நோயாளிகள் முதல் வாரம் 3 நாட்களும், இரண்டாவது வாரத்திலிருந்து தினமும் இம் முறையினைப் பின்பற்ற வேண்டும். பக்க விளைவுகள் எதுவுமில்லாத மருத்துவமுறை இது, எனினும் நீர் அதிகமாக உட்கொள்வதால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி வரும். இந்த வழிமுறைகளை பின்பற்றினால் இந்நோய்கள் முற்றிலும் குணமாகும் வாய்ப்பு அல்லது கடுமைகள் மட்டுப்படுத்தப்பட்டு வலிமைகள் உண்டாகும் என்று ஜப்பானிய மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனாலும் இந்த முறையை நமது அன்றாட கடமைகளில் ஒன்றாகப் பின்பற்றினால் மிகவும் நன்மை தரும் என்றே நம்ப வேண்டும்.
 -----------------------------------------------------------------------------------------------------------------------------------
 
உலகின் முன்னணி கணினி நிறுவனங்களில் ஒன்றான ஆப்பிள் தனது இலாபத்தை பல்வேறு சகோதர நிறுவனங்களுக்கும் பகிர்ந்து கணக்கு காட்டிய விதத்தில் ஆயிரம் கோடி டாலர்கள் கணக்கில் வரி செலுத்தாமல் தப்பித்துள்ளது என அமெரிக்க செனெட் ஆய்வறிக்கை ஒன்று கண்டறிந்துள்ளது.
ஆப்பிள் நிறுவனம் விதிமீறல் எதிலும் ஈடுபட்டதாக இந்த ஆய்வறிக்கை குற்றம்சாட்டவில்லை .
 என்றாலும் ஆப்பிள் நிறுவனத்தின் இந்த துணை நிறுவனங்கள் பல வரி செலுத்துவதற்காக எந்த ஒரு நாட்டிலுமே பதியப்பட்டிருக்கவில்லை என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
அயர்லாந்தின் கோர்க் நகரில் பதியப்பட்டுள்ள இப்படியான ஒரு துணை நிறுவனம், கடந்த ஐந்து ஆண்டுகளாக தொழில்நுறுவனங்களுக்கான வருமான வரி என்று கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒரு டாலர் கூட செலுத்தியிருக்கவில்லை .
ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரியான டிம் குக், இது சம்பந்தமாக காங்கிரஸ் மன்றத்தில் தோன்றி வாக்குமூலம் அளிக்கவுள்ளார்.
"நூறு கோடி டாலர்கள் பெறுமதி கொண்ட துணை நிறுவனங்களை அமெரிக்காவுக்கு வெளியில் அமைத்துக்கொண்டும், வரி விவகாரங்களைப் பொறுத்தமட்டில் எந்த ஒரு நாட்டில் இருந்தும் செயல்படவில்லை என்ற தோற்றத்தை உருவாக்கிக்கொண்டும் வரி செலுத்தாமல் தப்புவதில் தன்னிகரற்ற கில்லாடியாக ஆப்பிள் விளங்குவதாக "
-இந்த ஆய்வறிக்கையை உருவாக்கிய செனெட் குழுவின் தலைவரான செனெட் உறுப்பினர் கால்ர் லெவின் தெரிவித்துள்ளார்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------




Related Article:


பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog