வேழமுகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுத்து வரும்
வெற்றிமுகத்து விநாயகனைத் தொழப் புத்தி மிகுத்து வரும்
வெள்ளைக்கொம்பன் விநாயகனைத் தொழத்
துள்ளியோடும் தொடர்வினைகளே!
அப்பம் முப்பழம் அமுது செய்தருளிய
தொப்பையப்பனைத் தொழ வினையறுமே.
முழுமுதற்கடவுளான விநாயகர் கோவை குனியமுத்தூரில் யோக நிஷ்டையில் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
மகான்களின் அறிவுரைப்படியும், சிற்ப வல்லுனர்களின் யோசனைப்படியும் யோக விநாயகர் சிலையை உருவாக்கி. அமைதியான சூழலில் யோக வளம், தியானசக்தி, ஆன்மிக அறிவு ஆகியவற்றைப் பெறவும். நாடு நலம் பெறவும் வேண்டி யோக நிஷ்டை விநாயகரை பிரதிஷ்டை செய்து அமைக்கப்பட்ட அருமையான ஆலயம் ....
சபரிமலை ஐயப்பன் போன்று யோகநிலையில் காட்சியளிக்கிறார். கணபதி
இளஞ்சூரியனின் நிறத்தோடு, வலது முன்கையில் அட்சமாலையும், பின்கையில் கரும்பும், இடது முன் கையில் யோக தண்டமும், பின் கையில் பாசக்கயிறும் ஏந்தியுள்ளார். தன்னை நாடி வருவோருக்கு அஷ்ட யோகங்களையும் அருள்பாலிப்பவர்.
நுழைவுவாயிலில் வடக்கு நோக்கி விஷ்ணு துர்க்கை சந்நிதியும்,
உள்ளே புற்று, ராகு சிலையும் உள்ளது.
உள்ளே புற்று, ராகு சிலையும் உள்ளது.
உட்பிரகாரத்தில் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களை இறைவன் செய்கிறான் என்பதற்கேற்ப, பிரம்மா, விஷ்ணு, தட்சிணாமூர்த்தி கோலத்தில் சிவன் ஆகிய மும்மூர்த்திகள் அருள்பாலிக்கின்றனர்.
:விநாயகர் சதுர்த்தி, சங்கடஹரசதுர்த்தி, அமாவாசை,பவுர்ணமி, வெள்ளிக்கிழமை ராகுகால பூஜை. ஆகிய நாட்களில் திருவிழாவாக சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன ,,யோகாவில் ஆர்வமுள்ளவர்கள் வந்து வணங்க வேண்டிய சிறப்பான ஆலயமாகத் திகழ்கிறது ..
காலை 6 -10, (வெள்ளியன்று பகல் 12),மாலை 5.30 - இரவு 8.30.
இருப்பிடம்: உக்கடத்தில் இருந்து (4.5 கி.மீ) பாலக்காடு சாலை வழியாக சுந்தராபுரம் செல்லும் வழியில் நிர்மலா மாதா பள்ளி அருகில் அமைந்துள்ளது
ஸ்ரீ விநாயகர் பழங்கள் - காய் கனி அலங்காரம்,
கோட்லாம்பாக்கம் கிராமம், பண்ருட்டி,
Related Article: