(சம்பவ பர்வ தொடர்ச்சி)
வைசம்பாயணர் சொன்னார், "தனது அன்பான மனைவியால் இப்படிச் சொல்லப்பட்ட மன்னன் பாண்டு, ஒழுக்கவிதிகளை நன்கறிந்து, அறம் சார்ந்த வார்த்தைகளில், "ஓ குந்தி, நீ என்ன சொன்னாயோ அது உண்மைதான். பழங்காலத்தின் வியுஷிதஸ்வா நீ சொன்னதைப் போலத்தான் செய்தார். அவர் நிச்சயமாக தேவர்களுக்குச் சமமாக இருந்தார். ஆனால், நான் இப்போது ஒழுக்கம் சார்ந்த அனைத்து விதிகளையும் அறிந்த சிறப்பு மிகுந்த முனிவர்களால் சொல்லப்பட்ட சில நடைமுறைகளைச் சொல்கிறேன். ஓ அழகான முகமும், இனிய புன்னகையும் கொண்டவளே, முன்பெல்லாம் பெண்கள் வீட்டுக்குள் அடைத்து வைக்கப்படவில்லை. அவர்கள் கணவர்களையோ அல்லது மற்ற உறவினர்களையோ நம்பி இருக்கவில்லை. - See more at: http://mahabharatham.arasan.info/2013/06/Mahabharatha-Adiparva-Section122.html#sthash.xE96aqDS.dpuf
Related Article: