ஓடாத எதிர்நீச்சல் படத்துக்கு கொடுக்கப்பட்ட பில்டப் காரணமாக அப்படத்தில் நடித்த சிவகார்த்திகேயன்-ப்ரியாஆனந்த் இருவரது மார்க்கெட்டும் எகிறி நிற்கிறது. அதோடு, ஏற்கனவே படத்துக்குப்படம் சம்பளத்தை உயர்த்தி வந்த அவர்கள், இப்போது இன்னும் கடுமையாக உயர்த்தி விட்டனர். இதில் சிவகார்த்திகேயனின் சம்பளம் சினிமாவில் அவருக்கு சீனியரான விமலைவிட பன்மடங்கு அதிகரித்துவிட்டதாம்.
அதேபோல், ப்ரியாஆனந்தும் உயர்த்தி விட்டதாகத்தான் கூறப்படுகிறது. ஆனால், அவர் நான் என்ன ஒரு கோடி சம்பளம் வாங்கும் அளவுக்கு தகுதியான நடிகையா? என்று தன்னைத்தானே தாழ்த்திக்கொண்டு பேட்டி கொடுத்தார். ஆனால் இதெல்லாம் வெளிப்பேச்சுக்குத்தானாம். திரைக்குப்பின்னால் போட்டி போட்டு சம்பளத்தை உயர்த்தி வருகிறாராம் ப்ரியாஆனந்த்.
அதற்கேற்ப, தற்போது தமிழில் நடித்து வந்த அமலாபால், அஞ்சலி போன்ற நடிகைகள் ஆந்திராவில் கவனம் செலுத்தி வருவதால், போதிய நடிகையின்மை காரணமாக, வேறு வழியில்லாமல் சில படாதிபதிகளை ப்ரியாஆனந்தை தாங்கள் புக் பண்ணியிருப்பதாகவும் சொல்கிறார்கள். அதுமட்டுமின்றி, பிந்துமாதவி, நந்திதா, தன்சிகா போன்ற எந்த நடிகைகள் மார்க்கெட்டில் இடம்பிடிக்காததும் ப்ரியாஆனந்துக்கு சாதகமாகியிருப்பதாகவும் கூறும் படாதிபதிகள், திரைக்குப்பின்னால் நடிகர்-நடிகைகளின் சுயரூபம் எங்களுக்குத்தானே தெரியும் என்கிறார்கள்.
அதேபோல், ப்ரியாஆனந்தும் உயர்த்தி விட்டதாகத்தான் கூறப்படுகிறது. ஆனால், அவர் நான் என்ன ஒரு கோடி சம்பளம் வாங்கும் அளவுக்கு தகுதியான நடிகையா? என்று தன்னைத்தானே தாழ்த்திக்கொண்டு பேட்டி கொடுத்தார். ஆனால் இதெல்லாம் வெளிப்பேச்சுக்குத்தானாம். திரைக்குப்பின்னால் போட்டி போட்டு சம்பளத்தை உயர்த்தி வருகிறாராம் ப்ரியாஆனந்த்.
அதற்கேற்ப, தற்போது தமிழில் நடித்து வந்த அமலாபால், அஞ்சலி போன்ற நடிகைகள் ஆந்திராவில் கவனம் செலுத்தி வருவதால், போதிய நடிகையின்மை காரணமாக, வேறு வழியில்லாமல் சில படாதிபதிகளை ப்ரியாஆனந்தை தாங்கள் புக் பண்ணியிருப்பதாகவும் சொல்கிறார்கள். அதுமட்டுமின்றி, பிந்துமாதவி, நந்திதா, தன்சிகா போன்ற எந்த நடிகைகள் மார்க்கெட்டில் இடம்பிடிக்காததும் ப்ரியாஆனந்துக்கு சாதகமாகியிருப்பதாகவும் கூறும் படாதிபதிகள், திரைக்குப்பின்னால் நடிகர்-நடிகைகளின் சுயரூபம் எங்களுக்குத்தானே தெரியும் என்கிறார்கள்.
நன்றி:தினகரன்
Related Article: