Monday 15 July 2013

நீங்களும் மின்னூல் அனுப்பலாம்

உலகெங்கும் தமிழை மறந்த தமிழருக்கு ஆங்கிலம், கிந்தி, பிரெஞ்சு, டொச்சு என எம்மொழியிலும் தமிழ் கற்பிக்கும் நூல்கள் முதன்மையாகத் தேவைப்படுகிறது.
தமிழ் வாழத் தமிழ் இலக்கியங்கள் முதன்மையாக இருக்க வேண்டும். அதற்கு தமிழ் இலக்கியங்களை ஆக்குவோருக்கான கவிதை, பாட்டு, கதை, நாடகக் கதை, திரைக் கதை, நகைச்சுவை, கட்டுரை எழுத உதவும் நூல்கள் இரண்டாவதாகத் தேவைப்படுகிறது.
நம்மாளுகள் இலக்கியங்களை ஆக்கினால், அதனை வெளியிடுவதற்கான அறிவைப் பெற உதவும் அச்சு இதழியல், மின் இதழியல் சார்ந்த நூல்கள் மூன்றாவதாகத் தேவைப்படுகிறது.
இத்தனையும் இருந்தால் போதாது. நாம் தமிழர் எனக் கூறி நீண்ட நாள் வாழ்ந்து தாய்த் தமிழைப் பேண உளநலம், உடல் நலம், நெடு நாள் வாழ உதவும் மருத்துவ நால்கள், வழிகாட்டல் மற்றும் மதியுரை (ஆலோசனை) நால்கள் நான்காவதாகத் தேவைப்படுகிறது.
எல்லாம் சரி, நாம் தமிழர் எனக் கூறினால் நமது வரலாற்றுப் பின்புலம் தேவைப்படுகிறது. தமிழர் வரலாற்று நால்கள், தமிழர் ஆய்வு நால்கள், தமிழ் வரலாற்று நால்கள், தமிழ் ஆய்வு நால்கள் எனத் தமிழரின் அடையாளத்தையும் தமிழின் அடையாளத்தையும் வெளிப்படுத்தக்கூடிய நால்கள் ஐந்தாவதாகவும் அதிகமாகவும் தேவைப்படுகிறது.
Yarlpavanan


Related Article:

0 கருத்துரைகள்:



பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog