Sunday, 10 February 2013

உறவின்போது ஆ...ஊ... அதில் கில்லாடிகளாக இருப்பார்களாம்...!


உறவின்போது சத்தம்போட்டபடியும், கத்தியபடியும், கூச்சலிட்டபடியும், வாய் விட்டு முனகியபடியும் இருப்பவர்கள் செக்ஸ் விஷயத்தில் கில்லாடிகளாக இருப்பார்களாம்.

லீட்ஸைச் சேர்ந்த குழு ஒன்று இதை ஆய்வு செய்து தெரிவித்துள்ளது. சவுண்டு கூட கூட இன்பமும் கூடுதலாக இருக்குமாம். அதிலும் படுக்கை அறையில் ஆண்களை விட பெண்கள்தான் அதிகமாக சத்தம் போடுபவர்களாக உள்ளனராம். இதற்கு முக்கியக் காரணமாக கருதப்படுவது, ஆண்களைத் தூண்டி விட்டு அதிக இன்பத்தை நுகரும் அவர்களின் எண்ணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

படுக்கை அறையில் சத்தம் கித்தம் போடாமல் கமுக்கமாக உறவு கொள்வதே நல்லது என்று பொதுவாக கூறுவார்கள். ஆனால் அப்படி இல்லாமல் வாய் விட்டு அணத்துவது, பேசுவது, கூச்சலிடுவது என்று இருப்போர்தான் செக்ஸில் கில்லாடிகளாக இருப்பார்கள் என்று லீட்ஸ் ஆய்வு தெரிவிக்கிறது.

இப்படி வெளிப்படையாக ஈடுபடுபவர்கள்தான் செக்ஸ் விஷயத்தில் சிறந்தவர்களாக விளங்குகிறார்கள் என்பது இந்த ஆய்வின் முடிவாகும். எவ்வளவுக்கெவ்வளவு அனுபவித்து ஈடுபடுகிறீர்களோ, அந்த அளவுக்கு இன்பமும் கூடுதலாக இருக்குமாம்.

படுக்கை அறையில் ஆண்களை விட பெண்கள்தான் முழுமையான இன்பத்தை நுகரத் தேவையான அனைத்து வழிகள் குறித்தும் யோசிக்கிறார்களாம். மேலும் ஆண்களை விட பெண்கள்தான் அதிகம் சத்தம் போடுபவர்களாகவும் இருக்கிறார்களாம். தங்களுக்குத் தேவையானதை எப்படிப் பெற வேண்டும் என்பதும் அவர்களுக்குத் தெரிந்திருக்கிறதாம்.
சத்தம் போட்டே ஆண்களிடம் நன்றாக வேலை வாங்கி விடுகிறார்களாம். மேலும் இப்படிச் சத்தம் போடுவதன் மூலம் ஆண்கள் செக்ஸ் ரீதியாக தூண்டப்படுவதாகவும், அப்படித் தூண்டப்படும்போது அது தங்களுக்கு உபயோகமாக இருப்பதாகவும் பெண்கள் கூறுகிறார்கள்.மேலும் ஆண்களை உசுப்பேத்தி விடவும் இப்படி முணகல், செக்ஸ் ரீதியான சத்தமிடுதல் உள்ளிட்டவற்றை செய்வதாகவும் பெண்கள் கூறுகிறார்களாம்.

அதேபோல தங்களது பார்ட்னர் நன்கு சத்தம் போட்டபடி, பேசியபடி, முணகியபடி செக்ஸில் ஈடுபடும்போது அது ஆண்களுக்கும் பெரும் சந்தோஷம் தருகிறதாம். பரவாயில்லை,நாம்சிறப்பாகவே ஈடுபடுகிறோம், அதனால்தான் மகிழ்ச்சியில் நமது துணை அதை வாய் விட்டு வெளிப்படுத்துகிறார் என்று அவர்கள் கருதுகிறார்களாம். உண்மையும் அதுவாகத்தான் இருக்கிறதாம்.

பல பெண்கள் உறவு தொடங்கிய சில நிமிடம் ஆன பின்னர் உச்சத்தை நெருங்கப் போகும் சமயத்தில் கூடுதலாக சத்தம் போடுகிறார்களாம், ஆண்களை வேகமாக செயல்படவைக்கும் வகையில் செயல்படுகிறார்களாம். அப்போதுதான் பினிஷிங் சிறப்பாக அமைகிறது என்பது அவர்களின் கருத்து.

கருத்துக்கணிப்பில் கலந்து கொண்ட பெண்களில் 92சதவீதம் பேர் வாய் விட்டு உணர்வுகளை வெளிப்படுத்துவதால்தான் தங்களது உறவு சிறப்பாக அமைவதாகவும், ஆண்கள் சிறப்பாக செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
Thanks:retham


Related Article:


பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog