Sunday, 11 August 2013

இன்று வானில் நிகழும் சுவாரஸ்ய நிகழ்வு

வானில் நடக்கும் சுவாரஸ்ய நிகழ்வான எரிகல் பொழியும் நிகழ்ச்சி இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெறும் என அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த பிரபஞ்சத்தில் கோள்கள், துணை கோள்கள், கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் காணப்படுகின்றன.

இந்நிலையில், சில நேரங்களில் வால் நட்சத்திரங்கள் அருகில் வரும் போது அதன் வால் பகுதியில் உள்ள கற்கள் புவியின் ஈர்ப்பு விசையின் காரணமாக இழுக்கப்பட்டு பூமியில் விழுவது வழக்கம்.

அதாவது, 130 ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியனை சுற்றிவரும் "ஸ்விப்ட் டட்டில்" என்ற வால் நட்சத்திரத்தின் பாதைக்கு நெருக்கமாக இன்று பூமி கடந்து செல்லவுள்ளது. இதனால் அதன் துகள்கள் பூமியின் மீது தொடர்ந்து விழுந்து வருகிறது.

அப்படி விழக்கூடிய கற்களும் பூமியிலிருந்து சுமார் 80 கிலோ மீற்றர் தொலைவிலேயே எரிந்துவிடுவதால் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும் என அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இன்று முதல் 3 நாட்களுக்கு வானத்தின் வடக்கு பகுதியில், நள்ளிரவிற்கு பின்பு வெறும் கண்களால் பார்க்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

Related Article:
Srilanka Tamil News
Sri Lanka

0 கருத்துரைகள்:



பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog