Saturday, 19 January 2013

பதிவை பிரசுரம் செய்த "ஜூட்டிசன்ஸ் ஆட் பேஜ்" பத்திரிக்கைக்கு நன்றி !

"ஜூட்டிசன்ஸ் ஆட் பேஜ்" - இது சௌராஷ்டிரா மொழி பேசும் எங்கள் இன மக்களுக்காக மட்டுமின்றி எல்லோருக்கும் பயன் தரும் வகையில் பல விடயங்களை தாங்கி சென்னையிலிருந்து மாதமிருமுறை வெளிவரும் பத்திரிகை. 
இதன் நிறுவனர் மற்றும் ஆசிரியர் திரு.எஸ்.ராம ஈஸ்வர்லால் ஆவார். பாரம்பரியமிக்க சௌராஷ்டிரா குடும்பத்தில் இருந்து வந்த இவர், இப்பத்திரிக்கையை பல்லாண்டு காலமாக நடத்தி வருகிறார். சௌராஷ்டிரா மக்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருடன் நெருங்கிய தொடர்பு கொண்ட இவர், சௌராஷ்டிரா சமூகம் மற்றும் சௌராஷ்டிரா மொழி வளர்ச்சிக்கு தனது பத்திரிகை வாயிலாக அரும் பணியாற்றி வருகின்றார்.

இந்த பத்திரிக்கையில் சௌராஷ்டிரா சமூக செய்திகள், பயன் மிகு கட்டுரைகள், "நீதிமன்றம்" என்ற தலைப்பில் வழக்குரைஞர் திரு பி.ஆர்.ரமேஷ் பாபு அவர்கள் தரும் சட்ட ஆலோசனைகள், வாழ்த்து சேதிகள், திருமண பொருத்தம் தொடர்பான விவரங்கள் ஆகியன வெளி வருகின்றன. வாசகர்கள் பலரை கொண்ட இந்தப் பத்திரிக்கையின் மூன்றாண்டு சந்தா ரூ.200/- மட்டுமே. ஆண்டு சந்தா ரூ.72/-. இது மின் மடல் மூலம் 'பிடிஎப்' கோப்பு வடிவில் உலகெங்கும் அனுப்பி வைக்கப்படுகின்றது. மின்மடல் முகவரி  juttysuns@gmail.com

எனது இந்த வலைப் பதிவு தளத்தில் வெளி வரும் கட்டுரைகளை தனது "ஜூட்டிசன்ஸ் ஆட் பேஜ்" பத்திரிகையில் அவ்வப்போது வெளியிட்டு பெருமை சேர்த்து வரும் இவர், சென்ற 2012-ஆம் ஆண்டை நினைவு  கூர்ந்தும்  மற்றும் இந்த 2013-ஆம் ஆண்டை வரவேற்றும் நான் இந்த வலைப்பதிவு தளத்தில் கடந்த மாத முடிவில் எழுதிய "நினைத்து நினைத்து பார்த்தால்" என்ற கட்... மேலும் வாசிக்க பின்வரும் இனைப்பின் மீது சொடுக்கி வரவும்.

என்றும் அன்புடன்,

பி.ஆர்.ஜெ.


Related Article:

0 கருத்துரைகள்:



பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog