காரைநகர் விளையாட்டுக் கழகங்களும் தியாகி சோபா அறிவாலயமும் இணைந்து நடாத்திய காரைநகர் பாரம்பரிய விளையாட்டு விழா இன்றையதினம் மாலை இனிதே நிறைவடைந்தது. முன்னதாக காரைநகர் பாரம்பரிய விளையாட்டு விழாவின் நிறைவுநாள் போட்டிகளை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று காலை காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி மைதானத்தில் சம்பிரதாயபூர்வமாக தொடக்கி வைத்தார். முன்பதாக கல்லூரி வாயிலிலிருந்து கரகாட்டத்துடன் மைதானத்திற்கு அழைத்து வரப்பட்ட அமைச்சர் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அரங்கில் ஆசியுரையை தொடர்ந்து பாரம்பரிய விளையாட்டின் நிறைவுநாள் போட்டிகளை அமைச்சர் அவர்கள் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். காரைநகரின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த மூன்று நாட்கள் பல்வேறு பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் இடம்பெற்ற நிலையில் நிறைவு நாள் நிழச்சிகள் இன்றையதினம் முழுநாளும் காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. இன்றையதினம் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளுக்கு மேலதிகமாக திருமணமான, திருமணமாகாத ஆண்களுக்கிடையிலும் திருமணமான, திருமணமாகாத பெண்களுக்கிடையிலுமான கயிறுத்தல் போட்டி, 50 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கான ஓட்டப்போட்டி, 40 வயதிற்கு மேற்பட்டோருக்கான பின்பக்கம் ஓடும் போட்டி, நடுவர்களாக கடமையாற்றியோருக்கான சங்கீத கதிரை போட்டி போன்ற வித்தியாசமான விளையாட்டுக்களும் பெரும் விறுவிறுப்புடனும் ஆரவாரத்துடனும் இடம்பெற்றமை விசேட அம்சமாகும். மேற்படி போட்டிகளை மக்களோடு மக்களாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் மைதானத்தின் உள்ளேயே சென்று அருகிலிருந்து அவதானித்தமை மற்றுமோர் விடயமாகும். நிகழ்சியின் நிறைவாக இடம்பெற்ற பரிசளிப்பு நிகழ்வில் ஈபிடிபியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.வி.குகேந்திரன் (வீ.கே.ஜெகன்) சிறப்புரையாற்றியதுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பிரதம அதிதியின் உரையையும் நிகழ்த்தினார். அத்துடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஈபிடிபியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.வி.குகேந்திரன் (வீ.கே.ஜெகன்), முன்னாள் நீதிபதி ஏகநாதன், பிரதேச கடற்படை கட்டளை அதிகாரி கொமாண்டர் கருணாசேன, சிற்றூர்தி சேவைச் சங்க தலைவர் அரியரட்ணம், தீவக பொலிஸ் பொறுப்பதிகாரி வீரசிங்க, காரைநகர் சமூர்த்தி முகாமையாளர் ஐங்கரன், தொழிலதிபர் மனோகரன், யாழ். பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி யோகராஜா ஆகியோரினால் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன. மிகச்சிறப்பாக பெருமளவு பொதுமக்களின் பங்களிப்புடன் இடம்பெற்ற காரைநகர் பாரம்பரிய விளையாட்டு விழாவினை நடாத்துவதற்கு காரைநகர் பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவரும் ஈபிடிபியின் காரைநகர் பிரதேச இணைப்பாளருமான வீ.கண்ணன் (தோழர் ரஜனி) முன்னின்று உழைத்து அயராது பாடுபட்டதை காரைநகர் வாழ் பொதுமக்கள் பெரிதும் பாராட்டினார்கள். கடந்தகால யுத்த அனர்த்தங்களினால் உடல் உள ரீதியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு புத்தெழுச்சி ஊட்டும் வகையில் இவ்விளையாட்டு விழா அமைந்திருந்தமை சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும். நிகழ்வுகளின் நிறைவாக பிரதேச சமுர்த்தி உத்தியோகத்தர் கபிலனின் நன்றியுரையினை அடுத்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் தேசியக்கொடி இறக்கப்பட்டதை அடுத்து இவ்வருடத்திற்கான காரைநகர் பாரம்பரிய விளையாட்டு விழா இன்றையதினம் மாலை இனிதே நிறைவடைந்தது. |
Related Article:
Srilanka Tamil News
- புதுவை இரத்தினதுரை அவர்களின் பாடலை யாரும் தடைசெய்யவில்லை!- ஆலய நிர்வாகம்!
- நவனீதம்பிள்ளைக்கு நியாயமான முறையில் விளக்கமளிக்கத் தயார்: ஹக்கீம்
- மக்களின் வளமான வாழ்வுக்கு ஒளியேற்றுபவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா - முதன்மை வேட்பாளர் தவராசா தெரிவிப்பு
- சுவிஸ் தமிழர் இல்லம் 12வது தடவையாக நடாத்திய விளையாட்டு விழா
- கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது
- நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு கொடிச் சேலை எடுத்துச் செல்லும் நிகழ்வு
- இன்று வானில் நிகழும் சுவாரஸ்ய நிகழ்வு
- 23 வருடங்களுக்குப் பின்னர் இரண்டு புகையிரதங்கள் இன்று கிளிநொச்சி சென்றன
- கிராண்ட்பாஸ் பகுதியில் மீண்டும் பதற்றம்: இரு தரப்பினரிடையே மோதல்- மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்
- கிரான்ட்பாஸ் மசூதி மீது தாக்குதல்: இரு பொலிஸார் உட்பட 8 பேர் காயம்
Sri Lanka
- புதுவை இரத்தினதுரை அவர்களின் பாடலை யாரும் தடைசெய்யவில்லை!- ஆலய நிர்வாகம்!
- நவனீதம்பிள்ளைக்கு நியாயமான முறையில் விளக்கமளிக்கத் தயார்: ஹக்கீம்
- மக்களின் வளமான வாழ்வுக்கு ஒளியேற்றுபவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா - முதன்மை வேட்பாளர் தவராசா தெரிவிப்பு
- சுவிஸ் தமிழர் இல்லம் 12வது தடவையாக நடாத்திய விளையாட்டு விழா
- கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது
- நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு கொடிச் சேலை எடுத்துச் செல்லும் நிகழ்வு
- இன்று வானில் நிகழும் சுவாரஸ்ய நிகழ்வு
- 23 வருடங்களுக்குப் பின்னர் இரண்டு புகையிரதங்கள் இன்று கிளிநொச்சி சென்றன
- கிராண்ட்பாஸ் பகுதியில் மீண்டும் பதற்றம்: இரு தரப்பினரிடையே மோதல்- மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்
- வவுனியாவைச் சேர்ந்த பெண் லண்டனில் கொலை
- ஈழத்தமிழர்கள் 30 வருட கொடும்போரின் பின்னர் உண்மையில் மகிழ்ச்சியாக வாழ்கிறார்களா?
- உங்களுக்கும் பதின்மவயதில் மகள்/சகோதரி உண்டா?
- இயக்குநர் சீமான் பற்றிய சிங்கள இணையத்தள செய்தி(வயது வந்தோருக்கு மட்டும்)
- நுட்பம் மாநாடு 2013
- மரணதண்டனை!
- SRI LANKA'S MAIDEN COMMUNICATIONS SATELLITE SUPREMESAT-1 WAS LAUNCHED FROM XI-CHANG SPACE CENTERIN CHINA A SHORT WHILE AGO
- ஆழ ஊடுருவும் அணி இன்னுமொரு போர்க்குற்ற சாட்சி
- லெப்.கேணல் வீரமணியின் வீர வரலாறும் வீர வணக்க நினைவு நாளும்.
- இலங்கைக்கு விசிட் அடித்த தேமுதிக எம்.எல்ஏ. அருண்பாண்டியன் - அதிர்ச்சியில் உளவுத்துறை!
- வடக்கில் இராணுவத்தைக் குறைக்க வேண்டும்: பிரித்தானியத் தூதுவர் மீது கடும்கோபத்தில் இலங்கை.
- மே 18ல் சுண்டிக்குளம் காட்டில் நடந்தது என்ன?
- யாழில் இளம் யுவதிகளை காணவில்லை! பெற்றோர் முறைப்பாடு.
- கிளிநொச்சி தர்மபுரத்தில் இளம்பெண்களுக்கு கருத்தடை ஊசிமருந்தேற்றும் – மருத்துவர் விஜிதரன்.
- இலங்கை தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு மட்டக்களப்பிலேயே: மண்டபம் மட்டும் மாற்றம்
1 கருத்துரைகள்:
MOHEGAN RESORT CASINO - KARATO PULSA
MOHEGAN RESORT CASINO - 구리 출장안마 KARATO PULSA. KARATO PULSA. 부산광역 출장샵 KARATO PULSA. 오산 출장샵 KARATO PULSA. KARATO PULSA. KARATO PULSA. 포항 출장안마 KARATO PULSA. 목포 출장샵 KARATO PULSA.
Post a Comment