மருதபுரம் முருகன் ஆலய முன்றலில் இன்றைய தினம் (11) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது முயற்சியின் பயனாக இப்பகுதிக்கு மின்சாரம் கிடைக்கப் பெற்றுள்ளது. அந்தவகையில், வீடுகளுக்கு மட்டுமல்லாது மக்களது வாழ்வை மாற்றக் கூடிய திறம்படைத்தவர் அமைச்சர் அவர்கள் என்றும், கடந்த பல வருடங்களுக்கு மேலாக மின்சாரம் இல்லாது இருந்த நிலையில் இப்பகுதிக்கு மின்சாரத்தை பெற்றுக் கொடுப்பதில் மிகுந்த அக்கறையுடன் உழைத்தவர் என்றும் தெரிவித்தார்.
மின்சாரம் மட்டுமல்லாது வீதி போக்குவரத்து குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வாழ்வாதார உரிமைகளுடன் எமது மக்கள் சுதந்திரமாக வாழ வேண்டுமென்பதே எமது விருப்பாகும்.
அந்த வகையில் மருதபுரத்தை மருதநகராக மட்டுமல்லாது யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடமாகாணத்தை அமைச்சர் அவர்களது வழிகாட்டல் மற்றும் ஆலோசனைக்கு அமைவாக வளங்கொழிக்கின்ற பூமியாக மாற்றியமைப்போம் என்றும் சுட்டிக்காட்டினார்.
இதில் ஈ.பி.டி.பியின் மாகாண சபை வேட்பாளர்களான கந்தசாமி கமலேந்திரன் மற்றும் திருமதி ஞானசக்தி சீறிதரன் ஆகியோரும் உரைநிகழ்த்தினர்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கருத்துரையாற்றும் போது, வறுமைக்கோட்டிற்குட்பட்ட மாணவர்களது கல்வியை மேம்படுத்தும் வகையில் 50 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் திட்டத்தின் அடிப்படையில் மாகாண சபை நிதியிலிருந்து மாதமொன்றுக்கு தலா 500 ரூபா வீதம் வழங்கவும், மருதபுரம் இறங்குதுறையை அமைக்கவும், மருதபுரம் பொது மண்டபத்திற்கென தற்காலிக கொட்டகை அமைப்பதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்படுமெனவும் தெரிவித்தார்.
மருதபுரம் முருகன் கோவில் கூரையை புனரமைத்து தருவதாக தெரிவித்த அமைச்சர் அவர்கள் குடிநீர் தட்டுப்பாட்டை நீக்கும் வகையில் உவர்நீரை நன்னீராக்கும் திட்டம் விரைவில் அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் அதனூடாக வேலணை, ஊர்காவற்துறை, நெடுந்தீவு, காரைநகர் ஆகிய பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க முடியுமெனவும் தெரிவித்தார்.
இதனிடையே மின்சாரத்தை தமது பகுதிக்கு கிடைக்க வழிவகை செய்த அமைச்சர் அவர்களுக்கு அப்பகுதி மக்கள் தமது நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.
முன்பதாக காரைநகர் மருதபுரத்திற்கான புனரமைக்கப்பட்ட வீதியை அமைச்சர் அவர்கள் திறந்து வைத்து மக்கள் பாவனைக்கு கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது ஈ.பி.டி.பியின் காரைநகர் பிரதேச இணைப்பாளர் வீ.கண்ணன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.வி.குகேந்திரன் (வி.கே.ஜெகன்), ஈ.பி.டி.பியின் வலிகாமம் இணைப்பாளரும், வேட்பாளருமான சிவகுரு பாலகிருஸ்ணன் (ஜீவன்) ஆகியோர் உடனிருந்தனர்.
Related Article:
Srilanka Tamil News
- புதுவை இரத்தினதுரை அவர்களின் பாடலை யாரும் தடைசெய்யவில்லை!- ஆலய நிர்வாகம்!
- நவனீதம்பிள்ளைக்கு நியாயமான முறையில் விளக்கமளிக்கத் தயார்: ஹக்கீம்
- காரைநகர் பாரம்பரிய விளையாட்டு விழா நிறைவுநாள் நிகழ்வுகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் பங்குபற்றுதலுடன் நிறைவடைந்தன
- சுவிஸ் தமிழர் இல்லம் 12வது தடவையாக நடாத்திய விளையாட்டு விழா
- கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது
- நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு கொடிச் சேலை எடுத்துச் செல்லும் நிகழ்வு
- இன்று வானில் நிகழும் சுவாரஸ்ய நிகழ்வு
- 23 வருடங்களுக்குப் பின்னர் இரண்டு புகையிரதங்கள் இன்று கிளிநொச்சி சென்றன
- கிராண்ட்பாஸ் பகுதியில் மீண்டும் பதற்றம்: இரு தரப்பினரிடையே மோதல்- மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்
- கிரான்ட்பாஸ் மசூதி மீது தாக்குதல்: இரு பொலிஸார் உட்பட 8 பேர் காயம்
Sri Lanka
- புதுவை இரத்தினதுரை அவர்களின் பாடலை யாரும் தடைசெய்யவில்லை!- ஆலய நிர்வாகம்!
- நவனீதம்பிள்ளைக்கு நியாயமான முறையில் விளக்கமளிக்கத் தயார்: ஹக்கீம்
- காரைநகர் பாரம்பரிய விளையாட்டு விழா நிறைவுநாள் நிகழ்வுகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் பங்குபற்றுதலுடன் நிறைவடைந்தன
- சுவிஸ் தமிழர் இல்லம் 12வது தடவையாக நடாத்திய விளையாட்டு விழா
- கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது
- நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு கொடிச் சேலை எடுத்துச் செல்லும் நிகழ்வு
- இன்று வானில் நிகழும் சுவாரஸ்ய நிகழ்வு
- 23 வருடங்களுக்குப் பின்னர் இரண்டு புகையிரதங்கள் இன்று கிளிநொச்சி சென்றன
- கிராண்ட்பாஸ் பகுதியில் மீண்டும் பதற்றம்: இரு தரப்பினரிடையே மோதல்- மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்
- வவுனியாவைச் சேர்ந்த பெண் லண்டனில் கொலை
- ஈழத்தமிழர்கள் 30 வருட கொடும்போரின் பின்னர் உண்மையில் மகிழ்ச்சியாக வாழ்கிறார்களா?
- உங்களுக்கும் பதின்மவயதில் மகள்/சகோதரி உண்டா?
- இயக்குநர் சீமான் பற்றிய சிங்கள இணையத்தள செய்தி(வயது வந்தோருக்கு மட்டும்)
- நுட்பம் மாநாடு 2013
- மரணதண்டனை!
- SRI LANKA'S MAIDEN COMMUNICATIONS SATELLITE SUPREMESAT-1 WAS LAUNCHED FROM XI-CHANG SPACE CENTERIN CHINA A SHORT WHILE AGO
- ஆழ ஊடுருவும் அணி இன்னுமொரு போர்க்குற்ற சாட்சி
- லெப்.கேணல் வீரமணியின் வீர வரலாறும் வீர வணக்க நினைவு நாளும்.
- இலங்கைக்கு விசிட் அடித்த தேமுதிக எம்.எல்ஏ. அருண்பாண்டியன் - அதிர்ச்சியில் உளவுத்துறை!
- வடக்கில் இராணுவத்தைக் குறைக்க வேண்டும்: பிரித்தானியத் தூதுவர் மீது கடும்கோபத்தில் இலங்கை.
- மே 18ல் சுண்டிக்குளம் காட்டில் நடந்தது என்ன?
- யாழில் இளம் யுவதிகளை காணவில்லை! பெற்றோர் முறைப்பாடு.
- கிளிநொச்சி தர்மபுரத்தில் இளம்பெண்களுக்கு கருத்தடை ஊசிமருந்தேற்றும் – மருத்துவர் விஜிதரன்.
- இலங்கை தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு மட்டக்களப்பிலேயே: மண்டபம் மட்டும் மாற்றம்
0 கருத்துரைகள்:
Post a Comment