விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமிடையில் நடைபெற்ற போரின்போது தமிழ் பெண்கள் ஆண்களுக்கு சரிநிகராக போராட்டகளத்தில் பங்கெடுத்தனர். இதன் மூலம் தமிழ் மக்களிடையே ஒரு ஆயுத முனைச் சமூகமயப்படுத்தல் இடம்பெற்றது என்பதே உண்மை.
அச்சமூகமயப்படுத்தலில் பெண் அடிமைத்தனம் சாதியம் போன்றன ஒழிக்கப்பட்டதுடன் ஒட்டுமொத்த தமிழ்சமூகமும் தமது கலாச்சாரம் சார்ந்த விழுமியங்களை அதன் பழமையான பண்புகளை தொடர்ந்து பேணுவதற்கு தயங்கியதில்லை என்றே அனைவராலும் கருதப்பட்டது. இவ்வாறு பேணப்பட்டது மக்களுக்கு தமது கலாச்சாரத்தின் மீது இருந்த மதிப்பு மரியாதையிலா? என்று வினா தொடுத்தால் அவ்வினாவிற்கு தற்போது இல்லை என்றே பதிலளித்தல் பொருத்தமானதாக இருக்கும்.
ஏனெனில் விடுதலைப்புலிகள் இல்லாத இன்றைய சூழலில் தமிழ் மக்கள் தமது விழுமியங்களையும் கலாச்சார பண்புகளையும் தொடர்ந்து அந்நிலையிலேயே பேணாமையில் இருந்தே இம்முடிவை நாம் சுலபமாக பெறலாம்.
அன்று விடுதலைப்புலிகளால் தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்ட ஆயுத முனை நிர்வாகம்; தான் நிர்வகித்த மக்கள் கூட்டத்திற்கு பொழுதுபோக்கு வசதிகள் பலவற்றை சென்றடையவிடாமல் திட்டமிட்டு தடுத்தமை உலகறிந்த உண்மை.
இதன் காரணமாக தமிழ்மக்களால் காலச்சுழற்சிக்கேற்ற கலாச்சார மாற்றங்களை படிப்படியாக உள்வாங்கி; தங்களை அதற்கேற்ப இயைபாக்கம் செய்யமுடியாமல் போயிற்று. அதாவது கூர்படையாத கலாச்சாரத்தை கொண்ட சமூகமாக தமிழ்சமூகம் மாறியது.
இதன் விளைவை நாம் பாரப்போமானால்; போரின் பின்னரான காலகட்டத்தில் குறுகிய காலத்தில் கிடைத்த அதீத பொழுதுபோக்கு அம்சங்கள் மக்கள்மீது பாரிய கலாச்சார அழுத்தத்தை வழங்கி தமிழ்ச்சமூகத்திடையே கலாச்சார பிறழ்வுகளை தோற்றுவித்தது. அதாவது தமிழ்மக்கள் மீது திணிக்கப்பட்ட கலாச்சார அழுத்தத்தின் விளைவாக இன்று ஈழத்தமிழரின் கலாச்சாரம் விகாரமடையும் நிலையை அடைந்திருக்கிறது என்பதே உண்மை.
இதில் விசித்திரம் என்னவென்றால், தனிநாட்டுக்கான போராட்டம் என்ற பெயரில் தமிழரின் அதிகாரவர்க்கம் தனது சாமானிய மக்கள்மீது நீண்ட நெடுங்காலமாக மேற்கொண்ட சுரண்டல்களினாலும் அடக்குமுறைகளினாலும் தற்போது வெளித்தெரிய ஆரம்பித்திருக்கும் சமூக அனர்த்தங்களுக்கு தாம் பொறுப்பேற்று அவற்றை சரிசெய்ய முனையாமல் இச்சமூக அனர்த்தங்களை சிங்களவர்கள் திட்டமிட்டு தமிழர்கள் மீது திணிப்பதாகவும் இது ஒரு இனஅழிப்பு பொறிமுறையென்றும் ஓலமிடுவதே.
தமது இருப்புக்காகவும் அதிகார போதைக்காகவும் மக்கள் மீது திணிக்கப்பட்ட "துரோகி" பட்டம்சூட்டி நடுவீதியில் நெற்றியில் சுட்டு (பொட்டுவைத்து) கொல்லும் கொலைக்கலாச்சாரம் தற்போது முடிவுக்கு கொண்டுவரப்பட்டு மக்கள் நிம்மதியாக பீனிக்ஸ் பறவைகளைபோல தமது வாழ்வை சாம்பல் மேட்டிலிருந்து மீளக்கட்டமைக்க முனைவது இவர்களால் சகித்துக்கொள்ளமுடியவில்லை போலும்.
"மாற்றங்களை உள்வாங்காத எதுவும் கூர்ப்படைவதும் இல்லை. தக்கண பிழைத்து நீடித்து நிலைத்திருப்பதும் இல்லை" என்பதே டார்வின் நமக்கு கற்றுத்தந்த கூர்ப்புக் கொள்கை. இது ஈழத்தமிழரின் அரசியல் பயணத்துக்கும் பொருந்தும்.
வவுனியாவில் இடம்பெற்ற இசைநிகழ்வொன்றில் தமிழ் இளைஞர் யுவதிகள் மெய்மறந்து ஆடிப்பாடும் வீடியோ காட்சி.
Related Article:
Sri Lanka
- புதுவை இரத்தினதுரை அவர்களின் பாடலை யாரும் தடைசெய்யவில்லை!- ஆலய நிர்வாகம்!
- நவனீதம்பிள்ளைக்கு நியாயமான முறையில் விளக்கமளிக்கத் தயார்: ஹக்கீம்
- மக்களின் வளமான வாழ்வுக்கு ஒளியேற்றுபவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா - முதன்மை வேட்பாளர் தவராசா தெரிவிப்பு
- காரைநகர் பாரம்பரிய விளையாட்டு விழா நிறைவுநாள் நிகழ்வுகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் பங்குபற்றுதலுடன் நிறைவடைந்தன
- சுவிஸ் தமிழர் இல்லம் 12வது தடவையாக நடாத்திய விளையாட்டு விழா
- கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது
- நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு கொடிச் சேலை எடுத்துச் செல்லும் நிகழ்வு
- இன்று வானில் நிகழும் சுவாரஸ்ய நிகழ்வு
- 23 வருடங்களுக்குப் பின்னர் இரண்டு புகையிரதங்கள் இன்று கிளிநொச்சி சென்றன
- கிராண்ட்பாஸ் பகுதியில் மீண்டும் பதற்றம்: இரு தரப்பினரிடையே மோதல்- மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்
- வவுனியாவைச் சேர்ந்த பெண் லண்டனில் கொலை
- உங்களுக்கும் பதின்மவயதில் மகள்/சகோதரி உண்டா?
- இயக்குநர் சீமான் பற்றிய சிங்கள இணையத்தள செய்தி(வயது வந்தோருக்கு மட்டும்)
- நுட்பம் மாநாடு 2013
- மரணதண்டனை!
- SRI LANKA'S MAIDEN COMMUNICATIONS SATELLITE SUPREMESAT-1 WAS LAUNCHED FROM XI-CHANG SPACE CENTERIN CHINA A SHORT WHILE AGO
- ஆழ ஊடுருவும் அணி இன்னுமொரு போர்க்குற்ற சாட்சி
- லெப்.கேணல் வீரமணியின் வீர வரலாறும் வீர வணக்க நினைவு நாளும்.
- இலங்கைக்கு விசிட் அடித்த தேமுதிக எம்.எல்ஏ. அருண்பாண்டியன் - அதிர்ச்சியில் உளவுத்துறை!
- வடக்கில் இராணுவத்தைக் குறைக்க வேண்டும்: பிரித்தானியத் தூதுவர் மீது கடும்கோபத்தில் இலங்கை.
- மே 18ல் சுண்டிக்குளம் காட்டில் நடந்தது என்ன?
- யாழில் இளம் யுவதிகளை காணவில்லை! பெற்றோர் முறைப்பாடு.
- கிளிநொச்சி தர்மபுரத்தில் இளம்பெண்களுக்கு கருத்தடை ஊசிமருந்தேற்றும் – மருத்துவர் விஜிதரன்.
- இலங்கை தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு மட்டக்களப்பிலேயே: மண்டபம் மட்டும் மாற்றம்